Tuesday, December 7, 2010

பாடல் வரிகள்... குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மை ஈது
உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு
ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
தலையில் பேனும் ஈரும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓரு குலம்
உடுக்கும் உடைகள் படிப்பினாலும்
உள்ளபடி பேதமுண்டு
உண்மையில் வித்தியாசமில்லை
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
மாமா குரங்கு
தாத்தா குரங்கு
பாப்பா குரங்கு
நீதான் குரங்கு
நீ குரங்கு
குரங்கு... குரங்கு... குரங்கு...
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

No comments:

Post a Comment