Wednesday, December 8, 2010
தூக்கு தூக்கி பாடல்கள்
“தூக்கு தூக்கி”
திரைப்படம்: தூக்கு தூக்கி
நடிகர்கள்: சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி, ராகினி
இயக்குனர்: R.M. கிருஷ்ணசாமி
இசை: ஜி. ராமநாதன்
வருடம்: 1954
கதை
“கொண்டுவந்தால் தந்தை”
“கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்”
“சீர் கொண்டுவந்தால் சகோதரி”
“கொலையும் செய்வாள் பத்தினி”
“உயிர் காப்பான் தோழன்”
இந்த ஐந்து வாக்கியங்களும் கதாநாயகனின் வாழ்க்கையில் எப்படி உண்மையாகின்றன என்பதை சொல்லும் கதை.
இசை
தூக்கு தூக்கிப் படத்திற்காக எட்டுப் பாடல்களுக்கு இசை அமைத்தவர் ஜி. ராமநாதன் அவர்கள். ஒவ்வொரு பாடலுக்கும் தனிச்சிறப்பு உண்டு. கதைக்கேற்ப பாடல்கள், பாடல்க்கேற்ப இசை அமைந்துள்ளது.
1. “சுந்தரி சௌந்தரி நிரந்தரியே...”
பாடியது: பி.லீலா, ஏ.பி.கோமளா.
2. “பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே...”
பாடியது: டி.எம்.எஸ்
இயற்றியது: உடுமலை நாராயண கவி
3. “ஏறாத மலைதனிலே...”
பாடியது: டி.எம்.எஸ்
இயற்றியது: தஞ்சை ராமையாதாஸ்
ராகம்: காவடிச் சிந்து
4. “கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்? வேறிதிலே உந்தன் கவனம்?...”
பாடியது: டி.எம்.எஸ்., எம்.எஸ். ராஜேஸ்வரி
ராகம்: பீம்ப்ளாஸ்
5. “மேரே பியாரி நிம்பள் மேலே...”
பாடியது: வி.என். சுந்தரம், எம்.எஸ். ராஜேஸ்வரி
இயற்றியது: தஞ்சை ராமையாதாஸ்
ராகம்: ஹிந்துஸ்தானி காபி, ஆனந்த பைரவி
6. “வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து...”
பாடியது: எம்.எல். வசந்தகுமாரி, பி. லீலா
ராகம்: காம்போதி
7. “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...”
பாடியது: டி.எம்.எஸ்., பி.லீலா, ஏ.பி. கோமளா, வி.என். சுந்தரம்
ராகம்: ஷண்முகப்ரியா
8. “அபாய அறிவிப்பு...”
கேட்டு ரசித்து மகிழவும்...
Tuesday, December 7, 2010
பாடல் வரிகள்... பாலும் பழமும்...
"ஹூம் ஹூம் ஹும்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே...
உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமை போல் காத்திருப்பாயே
காதல் கொடியே கண் மலர்வாயே (பாலும்)
பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே (பாலும்)
ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதயநிலவே கண் துயில்வாயே (பாலும்)"
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே...
உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமை போல் காத்திருப்பாயே
காதல் கொடியே கண் மலர்வாயே (பாலும்)
பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே (பாலும்)
ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதயநிலவே கண் துயில்வாயே (பாலும்)"
பாடல் வரிகள்... குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மை ஈது
உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு
ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
தலையில் பேனும் ஈரும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓரு குலம்
உடுக்கும் உடைகள் படிப்பினாலும்
உள்ளபடி பேதமுண்டு
உண்மையில் வித்தியாசமில்லை
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
மாமா குரங்கு
தாத்தா குரங்கு
பாப்பா குரங்கு
நீதான் குரங்கு
நீ குரங்கு
குரங்கு... குரங்கு... குரங்கு...
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மை ஈது
உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு
ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
தலையில் பேனும் ஈரும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓரு குலம்
உடுக்கும் உடைகள் படிப்பினாலும்
உள்ளபடி பேதமுண்டு
உண்மையில் வித்தியாசமில்லை
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
மாமா குரங்கு
தாத்தா குரங்கு
பாப்பா குரங்கு
நீதான் குரங்கு
நீ குரங்கு
குரங்கு... குரங்கு... குரங்கு...
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
Subscribe to:
Posts (Atom)